தேவையான பொருட்கள்
காளான் – 125 கிராம்
கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் அரைத்த விழுது – 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
செய்முறை
காளான்களை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் பாதியாக நறுக்கிய காளான், வெங்காயம், கரம்மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சோள மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளான் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான காளான் பக்கோடா தயார்.