ஐந்தாவது தலைமுறை (5ஜி) நெட்வொர்க் ஆனது முன்னெப்போதையும் விடவும் மிக வேகமாக இணைய இணைப்பைக் கொண்டுவரும் என்பதால் மற்றும் நாட்டில் ஏற்கெனவே பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் இருந்து 5ஜி மொபைல்கள் அறிமுகமாகி விட்டதால், நாட்டு மக்கள் எப்போது இந்தியாவில் 5ஜி அறிமுகமாகும் என்கிற எதிர்பார்ப்பிற்கு – தங்களை அறியாமலேயே – தள்ளப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வி (வோடாபோன் ஐடியா) போன்ற நிறுவனங்கள் அனைத்தும் இயந்திரங்கள், பொருள்கள் மற்றும் 5 ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அனைவரையும் அனைத்தையும் இணைக்கக்கூடிய நெட்வொர்க்கை யதார்த்தமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அறியாதவர்களுக்கு, முந்தைய தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளுடன் (4ஜி) ஒப்பிடும்போது அதிக மல்டி ஜிபிபிஎஸ் வேகம், குறைந்த தாமதம் மற்றும் அதிக நம்பகத்தன்மை ஆகியவைகள் 5ஜி-யின் “சில” நன்மைகளாகும்.
அமெரிக்கா, தென் கொரியா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே 5ஜி “தரப்படுத்தலில்” முன்னேறியுள்ளன. அந்த 5ஜி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேருமா? அது இந்த 2021 ஆம் ஆண்டிலேயே நடக்குமா? இதோ பதில்கள்!
இந்தியாவில் 5ஜி அறிமுகம் எப்போது?
இந்த கேள்விக்கான பதில் கொஞ்சம் தந்திரமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி-ஐ அறிமுகம் செய்யும் என்கிற பேச்சுக்கள் ஆங்காங்கே அடிபட்டு வரும் நிலையில், மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது உள்நாட்டு தொலைத் தொடர்பு சந்தை 5ஜி சேவைகளுக்கு போதுமான அளவு முதிர்ச்சியடைய இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்புகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை. எனவே 5ஜி சேவை “இன்றோ நாளையோ” அறிமுகமாகாது; சிறிது காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி.
5ஜி ப்ரெக்வென்சி பேண்ட்ஸ் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மார்ச் 2021-இல் 700 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2,500 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான ஏலங்களை நடத்துகிறது, ஆனால் இது போதுமானதாக இருக்காது என்றும், இது நாட்டில் 5 ஜி அறிமுகத்தை மோசமாக பாதிக்கும் என்று இந்திய தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 3,300-3,600 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனையை பரிந்துரைக்கிறது, இது 5ஜி நெட்வொர்க்குகானதாக இருக்கும்.
ஜியோ 5ஜி – அம்பானியின் சில “தரமான” திட்டங்கள்!
மேலும் 5ஜி சேவைக்காக உலகளவில் பிரபலமாக இருக்கும் 3300-3600 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், இந்த டெலிகாம் நிறுவனம் தனது 5 ஜி ஆசைகளை நிறைவேற்ற வரவிருக்கும் ஏலத்தில் 700 மெகா ஹெர்ட்ஸ் வாங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஏர்டெல் 5ஜி – வரும் ஆனா வராது; ஆனாலும் வந்துடும்!
வி 5ஜி – ஏர்டெல் நிறுவனத்தை ஓரங்கட்ட சரியான வாய்ப்பு 5ஜி தான்!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஹூவாய் மற்றும் எரிக்சன் உள்ளிட்ட பல விற்பனையாளர்களுடன் 5ஜி சோதனைகளையும் இந்த டெலிகாம் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
பிஎஸ்என்எல் – 4ஜி சேவைக்கே இன்னும் முழுசா வழி விடல!
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை சார்ந்த திட்டங்கள் தற்போது வரை ஒரு மர்மமாகவே உள்ளன. டெல்லியில் 5ஜி “சேவையுடன்” வருவதாக இந்நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிவித்தது, ஆனால் அதற்கு பின்னர் இந்த 5ஜி விஷயத்தில் எந்த அப்டேட்டும் கிடையாது. 5ஜி மட்டங்களில் உகந்த டேட்டா வேகத்துடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை இந்த பிளாட்பாரம் காண்பிக்கும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபமா ஸ்ரீவாஸ்தவா ETT-யிடம் கூறி உள்ளார். அது தவிர்த்து இந்த டெலிகாம் நிறுவனம் ஒரு உள் சோதனை மையத்தையும் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.